யாவரின்
சுகமான
நேரம்தான்
நித்திரை
பலரின்
தூக்கத்தை
கெடுத்தது
நித்தி வந்த
திரை
தலையிலே
முண்டாசு
கழுத்திலே
ருத்ராட்சை
மடியிலோ
திராட்சை
ஆன்மீகம்
சொல்லும்
பெண்முகம்
அரவணைப்பில்
கம்பீரம்
போய்விட்டது
உன் தரம்
எரியிற
தீயில்
கண்மூடி
தியானம்
தவம் கலைந்து
கதவை
மூடி
ஞானம்
பித்துக்கு
வாக்குச்
சொல்லும்
நித்து
இப்போ
எங்கே
போச்சு உன்
சத்து
நிம்மதியை
தொலைத்தவந்தான்
அங்கே
வருகிறான்
நீ போட்ட
களியாட்டத்தால்
நொந்து
போய்கிறான்
நீ ஒரு
படைப்பாளிதான்
பிரசங்கம்
நடத்தினாயோ
பிரசவங்கள்
நடத்தினாயோ
ரஞ்சிதாவின்
நாயகனே
நாறிப் போய்விட்டாய்
இனி நீ
செண்டு
போட்டு
நடந்து
வந்தாலும்
செத்த
பிணம்தானே
இப்படிக்கு
-இனிமேல் காவி நிறத்தில் ஆடை அணியாதவன்
