
என்
எண்ணங்கள்
மூலம்
உன், என்
நிழற்படங்கள்
என்
இதயத்தை
சுருட்டிவிட்டாய்
அதனால்தான்
இந்த இமேஜில்
சுருக்கங்கள்
இணைந்த
இதயங்கள்
பேசுவதால்
இங்கு
இதழ்களுக்கு
மூடு விழா
இதய வரிகளை
இடைவிடாது
வாசித்து
சிவந்து
போனது
உன் இதழ்கள்
நீ விடும்
காதல்
மூச்சை
சுவாசித்தே
இறுகிப் போனது
என் இமைகள்
என்
தலைவிதி
சூரியக்
கதிர்களை
தேடிக் கொண்டிருக்கும்
உன் இமை
பூக்கள்
பட்டுப்
போன
என் நினைவுக்
கம்பிகளை
மீட்டிக் கொண்டிருக்கும்
உன் விரல்கள்
உன்னில்
அடங்கி
இருக்கிறேன்
என்றும்
உனக்குள்
புதைந்து
போகின்றேன்
-இப்படிக்கு
உன்னால் உயிர் பெற்றவன்

No comments:
Post a Comment