
ஒரே நேரத்தில்
பனியில்
நனைந்து
தீயில் சுட்டு
நீரில் கரைந்து
காற்றில் கலந்த
உணர்வுக்
காதல்
உலகில்
எத்தனையோ
சுடிதார்கள்
யார்
உன்னை
முதலில்
பார்த்தாலும்
மடிவார்கள்
பதினெட்டு
வருடம்
கழித்துதான்
தெரிகிறது
உன்னிடம்
பேசத்தான்
என்னிடம்
உதடுகள்.
வார்த்தைகள்..
வாக்கியங்கள்...
வலி
நிறைந்த
பிரசவங்கள்
குழந்தை ஒன்றுதான்
தாயாய்
என் இதயம்
குழந்தையாய்
காதல்
என் காதல்
அவசரம்தான்
விதைகளை
தூவி விட்டு
உடனே
பூ முளைக்க
வேண்டுகிற
தேனீ போல
நான்
ரசித்து
அனுபவிக்க
அமுதத்தை
விட
பேரமுதமானது
நஞ்சை விட
கொடுமையானது
இந்தக்
காதல்
துப்பாக்கி
இல்லாத
தோட்டாக்கள்
உன்
விழிகள்-அது
தினமும்
துளைத்து
வருவது
என் கண்கள்
-இப்படிக்கு
விழியில் கோர்த்தவன்

No comments:
Post a Comment