நாம்
வெறுக்கும்
நிம்மதியான
தற்காலிக
இடைவெளி
நம்
குடும்பத்திற்க்காக
ரசிக்கமுடியுமா!
விரல்களை
வெட்டிப்
போட்டுவிட்டு
டாடா
காண்பிக்கச்
சொல்கிறார்கள்
இதயங்கள்
இடம்
மாறியது
தெரிந்த
போது
தடம்
மாறியதாக
சொல்கிறார்கள்
விழிகள்
ஏற்றுக்
கொண்டு
இடியாய்
இறங்கியது
காதல் வேர்கள்
நம் இதயத்தில்
வேர்களின்
வேகத்திற்க்கு
நம் கண்ணீர்
அதை
விழ வைக்க
இப்போது
வெண்ணீர்
நொடியிலும்
நிமிடத்திலும்
தற்போது
வாழ்க்கை-
காரணம்
இறந்த காலத்தின்
நம்பிக்கை
உறவை
பிரித்தால்
தனிமை
மிஞ்சும்
காதல்
உணர்வை
பிரித்தால்
உடல்தான்
மிச்சம்
சில
நாட்களாக
அமாவசையை
அனுபவிக்கும்
நம் காதல்
மனங்கள்
ஏங்கும்
பெளர்ணமிக்காக
இந்த
கோப
விடுமுறை
முடியும் வரை
நம் காதல்
கொடி
அரைக் கம்பத்தில்
பறக்கட்டும்
இந்த
சின்ன
இடைவெளியில்
காய்ந்து
போனது
இதயம் மட்டுமல்ல
இதழ்களும்தான்...
-இப்படிக்கு
ஈர்க்கும் எதிரெதிர் துருவங்கள்

3 comments:
GOOD
hai brother, thanks to wrote this for me... i think you always fall in love... so, love always like you... i wish you to the same follow life long.....
thank you...
GANDHI SUBIRAMANI...
nalla kadal narukkugal.
polurdhayanithi
Post a Comment