Monday, January 18, 2010

போர்க்களம்


தினமும்
இரவில்
அதுவும்
கனவில்
களம்
காண்கிறேன்

விடியலில்
நீ விதைத்த
காலடி
விதைகளுக்கு
தினமும்
நீருற்றுகிறேன்

நீ கைவீசி
நடந்து
விட்டுச் சென்ற
இடத்தில்
இளைப்பாறுகிறேன்

எதிரே தூசிக்
காற்று
வந்தது
கண்களை
மூடிக் கொண்டாய்
பிறகு ஏன்
நான் வரும்
போதும்...?

நீ பார்வை
இடும்
இடங்களில்
நிறைய
தடவை
என்னை
வலுக்கட்டாயமாக
திணித்திருக்கிறேன்

உன் யதேச்சையான
விழிக் கதிர்கள்
கூட
என் மேல்
விழாதவாறு
மிகக்
கவனமாய் நீ

எனது
இதய செல்
உன் பார்வை
எனும் சிக்னல்
இல்லாமல்
செயலிழக்கிறது

நிமிர்ந்த நடை
நேர் கொண்ட
பார்வை
சில
சமயங்களில்
நீ பாரதியை
மறந்து போக
வேண்டும்

உனக்குத்
தெரியாமல்
ஒற்றை
ஆளாய் உன்னுடன்
போரிட்டுக்
கொண்டிருக்கிறேன்

நேருக்கு
நேர் - நீ
என் விழி
மோதி
நாமிருவரும்
போர்க்களம்
காணும் நாள்
வெகு தொலைவில்
இல்லை


-போரில் புறமுதுகு காட்டாதவன்

வருகைக்கு நன்றி!

...