Tuesday, February 8, 2011

நீ நான் நாம்...


நொடிகளில்
அடிக்கடி
விழிகளில்
நுழைந்ததால்
பிறந்தது
நமக்குள்
காதல்
மூன்றாவது
விழியாய்

நம் காதல்
விதை
போடாமல்
வளரும்
மரம்
பேசுவது
மட்டும்தான்
இதற்க்கு
உரம்

தேடாத
திகையாத
அலையாத
சிக்கனக்
காதல்
இப்போது
சிக்கென்ற
காதல்

பார்த்து
பல மாதங்கள்
பேசி சில
நாட்கள்
இதுமாதிரி
இல்லாமலும்
கிடைக்கும்
இந்த
பட்டம்-இதுதான்
நம் காதல்
சட்டம்

புதியதாய்
நம்மை
சுற்றி
இருப்பவைகளை
மறந்து
போக
நமக்கு கிடைத்த
பொன்னான
வாய்ப்பு
நம் காதல்

திடுமென
உயிர்
கூண்டுக்குள்
நுழைந்து
வாழும்
இன்னொரு
உயிர்
மனதை
பிசைகின்ற
உயிர்

இறக்கைகள்
முளைத்துவிட்ட
சந்தோசம்
ஒத்தயடி
பாதையில்
துணைக்கு
வந்த என்
காதல் தேசம்

நீ
என்பதும்
நான்
என்பதும்
நாமாகிப்
போனது - இனி
நாமாகிப்
போனது....

இப்படிக்கு
- சொக்கியவன், சிக்கியவன்,...இன்னும் பிற....!

வருகைக்கு நன்றி!

...