Sunday, December 6, 2015

வெள்ளம்



தண்ணீர் பஞ்சம்
இன்று தண்ணீரால்
அனைவருக்கும்
பஞ்சம்

தேர்தல் பந்திக்கு
முந்தும்
அமைச்சர் படை
வெள்ள சகதிக்கு
பிந்துவது இயற்கைதானே

மழை பெய்வதால்
தண்ணீர் பாக்கெட்டுகள்
மிஞ்சமாகிறது
டாஸ்மாக்கில்

கிழே விழுந்தால்
தூக்கி விடாதவர்களை
என்ன செய்ய முடியும்
அதுபோலத்தான்
இப்போதும்

பார்த்து சாப்பிடுங்கள்
ரொட்டியை
பிஸ்கட்டை
பழங்களை
படத்துடன் அல்ல

படம் போட்டு
வாங்கி பழகிக்
கொண்ட நாமும்
பதறாமல் வாங்கி
வைத்துக் கொள்ளத்தான்
வேண்டும்

நம் வீடை
சுத்தம் செய்ய
அடுத்தவர்
தயவெதற்கு
உழைப்பெதற்கு

சட்டம் கூட
சத்தமாகத்தான்
சொல்லுது
அம்மா அப்பாவை
அனாதையாய்
விட்டால் கைது
அவர்கள்
நம்மளை தாராளமாய்
கைவிடலாம்

நமக்கு நாமே
மக்களுக்குக்காக
நாம் – இப்படி
எல்லா வார்த்தைகளும்
அரசியலாகிப்போனது

தன் கையே
தனக்கு உதவி
இது கொஞ்சம்
பழைய சோறுதான்
ஆனால் உடம்புக்கு
நல்லது

மனதில்
உறுதி வையுங்கள்
திடமாக எழுங்கள்

-இப்படிக்கு 

மழை வந்தால் குடை பிடிக்க முடியாதவன்

வருகைக்கு நன்றி!

...