தண்ணீர் பஞ்சம்
இன்று தண்ணீரால்
அனைவருக்கும்
பஞ்சம்
தேர்தல் பந்திக்கு
முந்தும்
அமைச்சர் படை
வெள்ள சகதிக்கு
பிந்துவது இயற்கைதானே
மழை பெய்வதால்
தண்ணீர் பாக்கெட்டுகள்
மிஞ்சமாகிறது
டாஸ்மாக்கில்
கிழே விழுந்தால்
தூக்கி விடாதவர்களை
என்ன செய்ய முடியும்
அதுபோலத்தான்
இப்போதும்
பார்த்து சாப்பிடுங்கள்
ரொட்டியை
பிஸ்கட்டை
பழங்களை
படத்துடன் அல்ல
படம் போட்டு
வாங்கி பழகிக்
கொண்ட நாமும்
பதறாமல் வாங்கி
வைத்துக் கொள்ளத்தான்
வேண்டும்
நம் வீடை
சுத்தம் செய்ய
அடுத்தவர்
தயவெதற்கு
உழைப்பெதற்கு
சட்டம் கூட
சத்தமாகத்தான்
சொல்லுது
அம்மா அப்பாவை
அனாதையாய்
விட்டால் கைது
அவர்கள்
நம்மளை தாராளமாய்
கைவிடலாம்
நமக்கு நாமே
மக்களுக்குக்காக
நாம் – இப்படி
எல்லா வார்த்தைகளும்
அரசியலாகிப்போனது
”தன் கையே
தனக்கு உதவி”
இது கொஞ்சம்
பழைய சோறுதான்
ஆனால் உடம்புக்கு
நல்லது
மனதில்
உறுதி வையுங்கள்
திடமாக எழுங்கள்-இப்படிக்கு
மழை வந்தால் குடை பிடிக்க முடியாதவன்