Monday, October 18, 2010

விளையாடும் காதல்


சித்ரவதைகளிலே
வேண்டி
விரும்பக்
கூடியது
இந்த
காதல்
மட்டும்தான்

பார்க்கும்
முன்பு
பல கேள்விகள்
பார்த்த
பின்பு
விழி வேள்விகள்

உன் அழகு
உனக்கு
கெபாசிட்
இதனால்
நிறைய தடவை
போனது
என் டெபாசிட்

கஜினி
படையெடுத்தான்
கொள்ளையடித்தான்
நானும்
படையெடுத்தேன்
ஆனால்
கொள்ளையடித்தாய்

உன்னை
கண்களால்
களைவாடிய
பொழுதுகள்
கதை சொல்லும்
நீ சென்ற
பிறகு
தனித்து விட்ட
அந்த நிமிடம்
கொல்லும்

கத்தியெடுத்தவனுக்கு
கத்தியாலே
சாவு
தினமும்
சாகுறேன்
உன்
விழியாலே
என் அருமை
விழியாளே

வாலிலே
பட்டாசு
வைத்த
காளை
இந்த நிலமையில்
இப்போது
என் மூளை

படிக்காமலே
உன்னிடம்
நிறைய
அரியர்ஸ்
நான் அனுப்பிய
கடிதச் சுமை
தாங்காது
திணறியது
கூரியர்ஸ்

தும்பியை
பிடிக்கும்
துறுதுறுப்பு
இந்த
அம்பியை
கண்டாலே
ஏன் வெறுப்பு

உனக்காக
பொய் சொல்வேன்
சாம்பிள் ஒன்று
உன் தங்கை
குறைவுதான்
உன் அழகில்
கால் பங்கு

-இப்படிக்கு
தூண்டில் போட்டவன்

Tuesday, October 12, 2010

ஆதாம் ஏவாள்


மறந்து
போனார்கள்
மற்றதையெல்லாம்
கேட்டால்
இவர்கள்
காதலர்களாம்

எதை
பற்றியும்
கவலைபடாத
பற்றியதை
மற்றுமே
நினைக்கத்
தெரிந்த
நீரோக்கள்

எத்தனை
செய்வார்கள்
எதனையும்
செய்வார்கள்
ஆனால்
கண்களில்
மட்டும்
கள்ளத்தனம்

முக்காடு
போட்டு
முழு வேகம்
சென்று
பால்கனியில்
அமர்ந்து
படம் பார்க்கும்
பச்சை
காதலர்கள்

வராத
வீரம்
வந்தது
பல தரம்
காரணம்
ஜோடியின்
பார்வை
பூரணம்

கண்டுபிடிப்பதில்
தன்னை
மறப்பதும்
கண்டுபிடித்ததில்
தன்னை
கரைப்பதும்
இவர்களுக்கு
கை வந்த கலை

கை பற்றிச்
செல்கிற போது
இவர்கள்
லேசாவார்கள்
மற்றவர்களுக்கு
கனக்கும்
துடிக்கும்
வார்த்தைகள்
தடிக்கும்

பிறவிப்
பயனை
அடைந்த
ஜோடிகளாம்
முற்றிலும்
காதல்
மழையில்
நனைந்த
கோழிகளாம்

எந்த பிறவி
என்ன சொன்னாலும்
வாசலில்
அதை கழுவி
ஊற்றுவார்கள்
முறைத்தால்
பார்வையால்
கழுவில்
ஏற்றுவார்கள்

காதல்
வகுக்கப்படவில்லை
சொல்லித்தர
முடியாது
வருவது
தெரியாது
வருமுன்
காக்க முடியாது

மொத்தத்தில்
காதலர்கள்
ரசிக்க
ருசிக்க
தனித்து
விடப்பட்டதுதான்
இந்த
பூமித் தீவு

-இப்படிக்கு
நான் யாருனு தெரியாதாக்கும்...

வேறென்ன காதல்தான்!


ஒரே நேரத்தில்
பனியில்
நனைந்து
தீயில் சுட்டு
நீரில் கரைந்து
காற்றில் கலந்த
உணர்வுக்
காதல்

உலகில்
எத்தனையோ
சுடிதார்கள்
யார்
உன்னை
முதலில்
பார்த்தாலும்
மடிவார்கள்

பதினெட்டு
வருடம்
கழித்துதான்
தெரிகிறது
உன்னிடம்
பேசத்தான்
என்னிடம்
உதடுகள்.
வார்த்தைகள்..
வாக்கியங்கள்...

வலி
நிறைந்த
பிரசவங்கள்
குழந்தை ஒன்றுதான்
தாயாய்
என் இதயம்
குழந்தையாய்
காதல்

என் காதல்
அவசரம்தான்
விதைகளை
தூவி விட்டு
உடனே
பூ முளைக்க
வேண்டுகிற
தேனீ போல
நான்

ரசித்து
அனுபவிக்க
அமுதத்தை
விட
பேரமுதமானது
நஞ்சை விட
கொடுமையானது
இந்தக்
காதல்

துப்பாக்கி
இல்லாத
தோட்டாக்கள்
உன்
விழிகள்-அது
தினமும்
துளைத்து
வருவது
என் கண்கள்

-இப்படிக்கு
விழியில் கோர்த்தவன்

வருகைக்கு நன்றி!

...