Thursday, July 15, 2010
இது ”A" கவிதையல்ல
யாவரின்
சுகமான
நேரம்தான்
நித்திரை
பலரின்
தூக்கத்தை
கெடுத்தது
நித்தி வந்த
திரை
தலையிலே
முண்டாசு
கழுத்திலே
ருத்ராட்சை
மடியிலோ
திராட்சை
ஆன்மீகம்
சொல்லும்
பெண்முகம்
அரவணைப்பில்
கம்பீரம்
போய்விட்டது
உன் தரம்
எரியிற
தீயில்
கண்மூடி
தியானம்
தவம் கலைந்து
கதவை
மூடி
ஞானம்
பித்துக்கு
வாக்குச்
சொல்லும்
நித்து
இப்போ
எங்கே
போச்சு உன்
சத்து
நிம்மதியை
தொலைத்தவந்தான்
அங்கே
வருகிறான்
நீ போட்ட
களியாட்டத்தால்
நொந்து
போய்கிறான்
நீ ஒரு
படைப்பாளிதான்
பிரசங்கம்
நடத்தினாயோ
பிரசவங்கள்
நடத்தினாயோ
ரஞ்சிதாவின்
நாயகனே
நாறிப் போய்விட்டாய்
இனி நீ
செண்டு
போட்டு
நடந்து
வந்தாலும்
செத்த
பிணம்தானே
இப்படிக்கு
-இனிமேல் காவி நிறத்தில் ஆடை அணியாதவன்
Friday, July 9, 2010
காதல்னா சும்மாவா?
நிறைய
சந்தோஷங்கள்-
எனக்கு
என்பது
நமக்கான
பிறகு
விழி
கோர்க்காது
காய்ந்து
போனது
கண்கள்
மட்டுமல்ல
கனவும்தான்
விரல்
கோர்க்காது
சோர்ந்து
போனது
கரங்கள்
மட்டுமல்ல
நினைவும்தான்
உன்
தலை படாமல்
தாழ்ந்து
போனது
தோழ்கள்
மட்டுமல்ல
வாழ்வும்தான்
நீ சிந்திய
வெளிச்சப்
பூவில் தேன்
தேடும்
தேனீ
நான்
உன்
விழிகள்
போடும்
பந்தை
பாய்ந்து
பிடிக்கும்
தோனி நான்
நான்
அணு அணுவாய்
ரசிக்கிறேன்
காரணம்
உன் கண்கள்
பொக்ரான்கள்
நீ மெளனித்த
போது
உதடுகள்
மோதி
இடி இடித்தது
என் இதயத்தில்
உன்
இதமான
காதலால்
சுகமான
ஒரு
பிறவி...
இப்படிக்கு
- மூன்றெழுத்தில் மூச்சை வைத்தவன்
Subscribe to:
Posts (Atom)
வருகைக்கு நன்றி!
...