Monday, November 16, 2009
விளையாடாமல் ஒரு ரன் அவுட் !
பெயரோ
”தாக்ரே”
வார்த்தைகள்
தடித்து
இப்போது
தாக்குதே
நீங்களே
பந்து
போட்டு
விழுந்து
விட்டது
உங்கள்
விக்கெட்டு
முந்தின
தேர்தலில்
முக்காடு-வரும்
தேர்தலில்
எதிரொலிக்கும்
இந்த
நாவடு
தப்பான
வார்த்தகளை
விட்டு
நீங்களே
உங்களுக்கு
வைத்தது
இந்த
வேட்டு
எங்கள்
சச்சினின்
புகழும்
மட்டையும்
ரொம்ப
வெயிட்டு
உங்கள்
அரசியல்
வாழ்க்கைக்கு
விரைவில்
வரும்- பெரும்
பூட்டு
சச்சினுக்கு
இல்லை
ஹெட் வெயிட்டு
தாக்ரேவே
நீ
இந்தியனா
என்று
காட்டு?
இப்படிக்கு
- அம்பயர்
Friday, November 13, 2009
உனக்குள் நான்
யுத்தமில்லை
இரத்தமில்லை
ஆராத
காயமானது
எனக்கு
உன் ஆயுத
விழிகளால்
நீ சுடவுமில்லை
எரிக்கவுமில்லை
ஆனால்
சாம்பலானது
என்
மனது
நீ தூண்டிலிடவில்லை
வலை விரிக்கவிலை
அனால்
உனக்குள்
சிக்கிக் கொண்டது
நான்
நீ தொலைக்கவில்லை
தேடவில்லை
ஆனால்
கண்டறியப்பட்டேன்
நான்
நீ எழுதவில்லை
அடித்து
திருத்தவில்லை
உன்
பெயருக்குப் பின்னால்
என் பெயர்
நீ பேசவுமில்லை
சிரிக்கவுமில்லை
ஆனால்
அடிக்கடி
உன்
உதடுகளுக்கிடையே
நான்
நீ பயணப்படவில்லை
பழக்கமாகவில்லை
ஆனால்
பணயமானது
நான்
நீ சுட்டிக்காட்டவில்லை
தேர்ந்தெடுக்கவில்லை
உன்னை
அறியாமல்
உனக்குள்
நான்
இப்படிக்கு
-உன் விழிகளால் தேடப்படுபவன்
Sunday, November 8, 2009
அபூர்வ சகோதரர்கள்
தலை படம்
போடாமல்
விழா
அதானால்தான்
ரெட்டிகளுக்கு
சுரங்கம்
நடத்த
வந்தது
தடா
உருவானது
கோஷ்டி
உருட்டப்பட்ட
தலைகள்
பறந்தன
அறிக்கைகள்
இந்த
கடத்தல்
கொஞ்சம்
வித்தியாசம்தான்
கடத்தப்பட்டவர்கள்
ஸ்டார் ஓட்டல்களில்
ஆட்சி
முடிய
சில மணித்துளிகள்
அதனால்
தலைவரின்
கண்களில்
கண்ணீர்
துளிகள்
விஜய் டீவியின்
நீயா நானாதான்
நடுவராக
சுஷ்மா
அதுதான்
சுவரஸ்யமே
மக்களுக்காக
வந்த
கூட்டத்தை விட
இந்த
அக்கப்போருக்காக
வந்த கூட்டம்
அதிகம்
பிறகென்ன
இருவருக்கும்
கடைசியில்
நம்ம கட்டிப்பிடி
வைத்தியம்தான்
இப்படிக்கு
வைத்தெரிச்சலுடன்
- நல்ல ஒட்டு போட்டவன்
Saturday, November 7, 2009
காதலின் மரணப்பிடியில்
நிறைய
தேங்குகின்றன
உன் நினைவுகள்
என்
நினைவலைகளில்
நிறைய
ஒப்பந்தம்
செய்து கொண்டாய்
என்னை
பாராமலிருக்க
உன் மனத்துடன்
அம்புகளை
எய்துவிட்டு
அமைதியாகிவிடுகிறது
உன் விழிகள்
ஆனந்தமடைகிறது
என் மனது
தூக்கத்தில்
நடப்பவனை
கேள்விப்பட்டிருப்பாய்
அனால்- நான்
உன் நடையால்
தூக்கம் கெட்டு
அலைகிறேன்
கடல் அலை
பார்த்து
பயந்ததில்லை
நான் - ஆனால்
உன் கடைக்கண்ணின்
அலை அடித்து
அதிர்ந்து
போயிருக்கிறேன்
காற்று பட்டு
சிவந்து
போன உன்
கன்னங்களை
பார்த்து
நான் நிறையவே
காயம்பட்டிருக்கிறேன்
உன்
ஒற்றைச்
சுருள் முடியில்
என்னை எப்போதோ
முடிந்து விட்டாய்
தன்னை
அறியாமல்
என்
திருட்டுப்பார்வை
வேகத்தை
ஜீரணிக்க முடியாமல்
என்
காதல் மரத்தின்
சில
கிளைகளை
வெட்டிச் சென்றாய்
நம்
காதல்
மரத்தின்
வேரில் - நீ
நீரூற்றும்
நாள்
வெகு தொலைவில்
இல்லை
இப்படிக்கு
- பசுமையான வேர்
ஒரு மோதிரம் இரு கொலைகள்
சமீபத்தில் கிழக்குப் பதிப்பகம் வெளியிடும் ”ஒரு மோதிரம் இரு கொலைகள் ” நாவலை படிக்க நேர்ந்தது.
கதை சுருக்கம் :-
கொலை நடக்கிறது அதை துப்பு துலங்க வருகிறார் ஷெர்லாக், அதன் பின் மீண்டும் ஒரு கொலை நடக்கிறது, அதை தன் திறமையால் எப்படி கண்டறிகிறார் என்பதே ”ஒரு மோதிரம் இரு கொலைகள் ”
விமர்சனம் :-
நம் தமிழ் நாவல்களை படித்தவர்கள் எளிதாகவும், புதிதாக நாவல் படிப்பவர்கள் சற்று பொறுமையாக படித்தால், அனைவருக்கும் ஆனந்தம் தரும் இனிய நாவல் இது. முதலில் நான் ஆங்கில நாவலே படித்ததில்லை (சற்று புரியாது). இந்த நாவலை அருமையாக மொழிபெயர்ப்பு செய்துள்ள பத்ரி சேஷாத்திரி அவர்களுக்கும், வெளியிட்ட கிழக்குப் பதிப்பகத்தாருக்கும் நன்றிகள்.
நறுக்குத் தெரித்த வசனங்கள், அமைதியான அறிமுகம் என ஆரம்பிக்கும இக்கதையில் வர்ணனை மற்றும் கதை செல்லும் பாங்கு ஓர் ஆங்கில படத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்ப்படுத்தியது. துப்பறிதலின் எல்லையை காண்பித்துள்ளார்கள், நமக்கு இது ஒரு புதிய பரிணாமம். அதிகம் சிந்திக்கத் தெரிந்த மனிதனின் செயல்களை குற்றத்தை ஆராய்பவராக முதலில் நமக்கு காட்டிவிட்டு கதைக்கான முடிவாக அவரின் மன எண்ணங்களை கொண்டு குற்றத்தை எப்படி கண்டுபிடித்தார் என்று சொல்கிறார்கள்.
அங்கேயும் போலிஸை சந்தோசமாக கிண்டலடிக்கிறார்கள். 18 ம் நூற்றாண்டு கால கதை என்பதால் சுவரஸ்யமாக இருக்கிறது. கொலை நடந்த இடத்தில் மற்றவர்களை தவிர போலிஸ் சாதாரணமாகத்தான் இருப்பார்கள்(நிறைய பார்த்த அனுபவம்) ஆனால் சிரித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் ஷெர்லாக் சற்று ஆயாசமாக, புன்சிரிப்புடன் கொலையை ஆராய்வதாக வருவது அவரின் தனித்தன்மயை காட்டுகிறது.
தேவையற்ற விசயங்களை புத்தியில் ஏற்ற வேண்டாம் என்பதின் விளக்கம் கதையில் போகப் போகப் புரிகிறது. கொலைக்கு காரணமானவர்களின் சிறிய வட்டத்தை கூட ஷெர்லாக் அதிகம் அலட்டவில்லை. ஒரு மனிதனின் காலடித்தடங்களை வைத்து அவனது உயரத்தைக் கூற சற்று அனுபவம் வேண்டும். மேலும் குதிரையின் காலடித்தடதை வைத்து அதன் லாடங்களை பற்றிச் சொல்லியிருப்பது புதுமை.
ஷெர்லாக் கொலைக்கான காரணத்தை ஆராயும் போது ஏற்படும் சிறு கோபம், ஏமாற்றம் அதை பற்றி அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருப்பது, சோர்ந்து போகாமல் வேலையை தொடர்வது நமக்கு ஒரு படிப்பினை. அதிர்ஷ்டவசமாக கொலைகாரனை கண்டுபிடித்ததாக அல்லாமல், அதற்க்காக அவர் மெனக்கெட்டிருப்பது அவரின் இரண்டாம் பாகத்தில் தெரிகிறது.
இரண்டாம் பாகம் :-
கொலைக்கான காரணத்தையும், அதை கண்டுபிடித்ததை ஒரிரு பக்கத்தில் முடிக்காமல் கதையின் அடி வேர் வரை தொட்டிருக்கிறார். பின் பகுதியில் அனைத்து விசயங்களையும் சொல்வதர்க்கு அதிக பக்கங்கள் எடுத்த இடத்தில் காதலுக்கு சற்று அதிகப்படுத்தி இருந்தால் இன்னும் நன்றாயிருந்திருக்கும். ஆனாலும் இதில் வாசகர்கள் திருப்தி அடைய நிறைய விசயங்கள் உள்ளன. பழிவாங்கும் உணர்சியை சற்று ஆழமாக அதற்க்கான காரணங்களை ஆணித்தரமாக சொல்லப்பட்டுள்ளது.
ஒரு மனிதனின் வாழ்நாள் சந்தோசமாக எண்ணியது கிடைக்கவில்லை என்றால் அதற்க்காக அவன் தன் வாழ்நாளையே பணயமாக வைப்பது அரிது. என்னை பொறுத்தவரை கதையில் இரண்டு நாயகர்கள் ஒவ்வொரு பாகத்திலும்.
முடிவு :-
நல்ல கதை எந்த மொழியானாலும் பாரட்டியே தீரவேண்டும், அந்த வகையில் இந்த நாவல் ஒரு பொக்கிஷம். ஆனால் சில பேர் தங்களுடைய விமர்சனங்களில் தமிழ் நாவல் எழுத்தார்களை குறை சொல்லியிருப்பது ஏற்க்கக் கூடியதல்ல.
மொத்தத்தில் இந்த நாவல் நல்ல ஒரு வித்தியாசத்தை பூர்த்தி செய்து மன நிறைவத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை. வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு படித்து மகிழுங்கள்.
ஒரு மோதிரம் இரு கொலைகள்
ஆர்தர் கோனன் டாயில்,
தமிழில்: பத்ரி சேஷாத்ரி
விலை: ரூபாய் - 120
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
புத்தகத்தை வாங்க: http://nhm.in/shop/978-81-8493-142-6.html
நறுக்குத் தெரித்த வசனங்கள், அமைதியான அறிமுகம் என ஆரம்பிக்கும இக்கதையில் வர்ணனை மற்றும் கதை செல்லும் பாங்கு ஓர் ஆங்கில படத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்ப்படுத்தியது. துப்பறிதலின் எல்லையை காண்பித்துள்ளார்கள், நமக்கு இது ஒரு புதிய பரிணாமம். அதிகம் சிந்திக்கத் தெரிந்த மனிதனின் செயல்களை குற்றத்தை ஆராய்பவராக முதலில் நமக்கு காட்டிவிட்டு கதைக்கான முடிவாக அவரின் மன எண்ணங்களை கொண்டு குற்றத்தை எப்படி கண்டுபிடித்தார் என்று சொல்கிறார்கள்.
அங்கேயும் போலிஸை சந்தோசமாக கிண்டலடிக்கிறார்கள். 18 ம் நூற்றாண்டு கால கதை என்பதால் சுவரஸ்யமாக இருக்கிறது. கொலை நடந்த இடத்தில் மற்றவர்களை தவிர போலிஸ் சாதாரணமாகத்தான் இருப்பார்கள்(நிறைய பார்த்த அனுபவம்) ஆனால் சிரித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் ஷெர்லாக் சற்று ஆயாசமாக, புன்சிரிப்புடன் கொலையை ஆராய்வதாக வருவது அவரின் தனித்தன்மயை காட்டுகிறது.
தேவையற்ற விசயங்களை புத்தியில் ஏற்ற வேண்டாம் என்பதின் விளக்கம் கதையில் போகப் போகப் புரிகிறது. கொலைக்கு காரணமானவர்களின் சிறிய வட்டத்தை கூட ஷெர்லாக் அதிகம் அலட்டவில்லை. ஒரு மனிதனின் காலடித்தடங்களை வைத்து அவனது உயரத்தைக் கூற சற்று அனுபவம் வேண்டும். மேலும் குதிரையின் காலடித்தடதை வைத்து அதன் லாடங்களை பற்றிச் சொல்லியிருப்பது புதுமை.
ஷெர்லாக் கொலைக்கான காரணத்தை ஆராயும் போது ஏற்படும் சிறு கோபம், ஏமாற்றம் அதை பற்றி அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருப்பது, சோர்ந்து போகாமல் வேலையை தொடர்வது நமக்கு ஒரு படிப்பினை. அதிர்ஷ்டவசமாக கொலைகாரனை கண்டுபிடித்ததாக அல்லாமல், அதற்க்காக அவர் மெனக்கெட்டிருப்பது அவரின் இரண்டாம் பாகத்தில் தெரிகிறது.
இரண்டாம் பாகம் :-
கொலைக்கான காரணத்தையும், அதை கண்டுபிடித்ததை ஒரிரு பக்கத்தில் முடிக்காமல் கதையின் அடி வேர் வரை தொட்டிருக்கிறார். பின் பகுதியில் அனைத்து விசயங்களையும் சொல்வதர்க்கு அதிக பக்கங்கள் எடுத்த இடத்தில் காதலுக்கு சற்று அதிகப்படுத்தி இருந்தால் இன்னும் நன்றாயிருந்திருக்கும். ஆனாலும் இதில் வாசகர்கள் திருப்தி அடைய நிறைய விசயங்கள் உள்ளன. பழிவாங்கும் உணர்சியை சற்று ஆழமாக அதற்க்கான காரணங்களை ஆணித்தரமாக சொல்லப்பட்டுள்ளது.
ஒரு மனிதனின் வாழ்நாள் சந்தோசமாக எண்ணியது கிடைக்கவில்லை என்றால் அதற்க்காக அவன் தன் வாழ்நாளையே பணயமாக வைப்பது அரிது. என்னை பொறுத்தவரை கதையில் இரண்டு நாயகர்கள் ஒவ்வொரு பாகத்திலும்.
முடிவு :-
நல்ல கதை எந்த மொழியானாலும் பாரட்டியே தீரவேண்டும், அந்த வகையில் இந்த நாவல் ஒரு பொக்கிஷம். ஆனால் சில பேர் தங்களுடைய விமர்சனங்களில் தமிழ் நாவல் எழுத்தார்களை குறை சொல்லியிருப்பது ஏற்க்கக் கூடியதல்ல.
மொத்தத்தில் இந்த நாவல் நல்ல ஒரு வித்தியாசத்தை பூர்த்தி செய்து மன நிறைவத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை. வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு படித்து மகிழுங்கள்.
ஒரு மோதிரம் இரு கொலைகள்
ஆர்தர் கோனன் டாயில்,
தமிழில்: பத்ரி சேஷாத்ரி
விலை: ரூபாய் - 120
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
புத்தகத்தை வாங்க: http://nhm.in/shop/978-81-8493-142-6.html
Subscribe to:
Posts (Atom)
வருகைக்கு நன்றி!
...