Thursday, February 18, 2010

உனக்குள் புதைந்து போனவன்


என்
எண்ணங்கள்
மூலம்
உன், என்
நிழற்படங்கள்

என்
இதயத்தை
சுருட்டிவிட்டாய்
அதனால்தான்
இந்த இமேஜில்
சுருக்கங்கள்

இணைந்த
இதயங்கள்
பேசுவதால்
இங்கு
இதழ்களுக்கு
மூடு விழா

இதய வரிகளை
இடைவிடாது
வாசித்து
சிவந்து
போனது
உன் இதழ்கள்

நீ விடும்
காதல்
மூச்சை
சுவாசித்தே
இறுகிப் போனது
என் இமைகள்

என்
தலைவிதி
சூரியக்
கதிர்களை
தேடிக் கொண்டிருக்கும்
உன் இமை
பூக்கள்

பட்டுப்
போன
என் நினைவுக்
கம்பிகளை
மீட்டிக் கொண்டிருக்கும்
உன் விரல்கள்

உன்னில்
அடங்கி
இருக்கிறேன்
என்றும்
உனக்குள்
புதைந்து
போகின்றேன்

-இப்படிக்கு
உன்னால் உயிர் பெற்றவன்

Tuesday, February 16, 2010

காதலித்(தேன்)


உன் விழி
படிக்கட்டில்
பயணிக்கிறேன்
உன் பார்வை
அறிந்தும்
அறியாமலும்

உன் கிட்டப்
பார்வையால்
கெட்டுப்
போயிருக்கிறது
என்
இதயம்

தினமும்
உன்னை
கண்டவுடன்
என் விழிகள்
மேயந்து வர
கிளம்புகிறது

வீழ்வதும்
எழுவதும்
தொடர்கின்றன
நாமிருவரும்
விழிகளால்
மோதும் போது

எதிரெதிர்
துருவங்கள்
ஒன்றையொன்று
ஈர்க்கும் தத்துவம்
உண்மையாகிப்
போனது
நம் புருவங்களால்

உன் இதழ்கள்
பிரிந்து
சேர்ந்து
வார்த்தைகளாகி
வந்து
என் இதயத்தை
காய வைக்கிறது

உன்
கூர்மையான
கூந்தலை
பார்க்கும் போது
சில சமயம்
குருடாகி விடுகிறது

தினமும்
ஊனமாகிப்
போகிறேன்
உன்
நடை அழகை
பார்த்து

சில சமயம்
விரதமிருக்கின்றன
எனது விழிகள்
ஜன்னலோரம்
உன்
விரல்கள் காணாது

தேனென்றால்
வண்டு
பூவை
சுற்ற வேண்டும்
நீ வேண்டுமென்றாலும்
நானும்...

இப்படிக்கு
-உன் கடைகண்ணால் ஆசிர்வாதிக்கப்பட்டவன்

Wednesday, February 10, 2010

தேவைதான் இது எனக்கு!


நீ
சிந்துகின்ற
பார்வையை
எண்ணி
சிலிர்த்துப் போனது
என் மனது

நீ துடைத்துவிட்ட
வேர்வை
துளிகள்
இப்போது
எனக்குள்
முளைத்துவிட்டன

உன் கண்கள்
எனும் தீக்குச்சி
எப்போது
என் பார்வை
பட்டு
பதத்துப் போகும்

நீ உன்
கை பதித்த
இடங்களின்
கை ரேகைகளை
நகலெடுக்கும்
நான் ஒரு
குற்றவாளி

உன் வரவுக்காக
கடைகளும்
என்
கடைக் கண்ணும்
காத்திருக்கின்றன

என் வார்த்தைகளை
தடுக்கின்றன
உன்னால்
ஊனமாக்கி
ஒதுக்கப்பட்ட
உன்
காதோர
முடிக் கற்றைகள்

கோபமோ
முறைப்போ
வசவோ
கசந்த
வார்த்தைகளோ
இதில்
ஏதாவது ஒரு
ஆயுதத்தை
எய்து விடு

திரும்பிப் பார்ப்பது
தீய பழக்கமல்ல
இதை
தினமும்
சொல்கிறேன்
உன் பின்னால்
வந்து

நாள் முழுவதும்
உன் மீது
போர்
தொடுத்து
என்னை
சிறை கொடுக்கிறேன்

வழக்கமில்லை
வருந்துவதற்க்கு
இந்த வலிகள்
வேண்டும்
உன்னோடு
வாழ்வதற்க்க

- இப்படிக்கு
நிராயுதபாணி ஆனவன்

வருகைக்கு நன்றி!

...