Saturday, August 20, 2011

காதல் பிச்சை

                                
நித்தமும்           
தேடித்
திரிகிறேன்
உன்
பித்தம்
தலைக்கேறி
சத்தம்
போடாமல்

ஒருமுறை
பார்த்து விட்டாய்
நெஞ்சினிலே
நாத்து
நட்டாய்
நீரூற்றி
வருகிறேன்
அதில் நிதமும்
நீ தேரோட்டி
வருகிறாய்

எப்போதும்
சிரிப்போடு
உன் பார்வை
இது
போக்கும்
எப்போதும் என்
சோர்வை

தலை முடி
கோதி
வருடிடும்
உன் விரல்கள்
அதை
தப்பாது
கைபிடிக்கும்
என் கரங்கள்

என் மீது
பட்டு
நிலை குலையச்
செய்தது உன்
துப்பட்டா
எப்போதும்
என் இதயம்
உனக்கு
பட்டா

தாவணிக்
கனவுகள்
ஆவணியில்
பூர்த்தியாகுமா?
இல்லை
ஆழிப் பேரலையில்
கரைந்து
போகுமா?

இன்னமும்
தொடர்கிறேன்
உன்
புன் சிரிப்பாலே
என் இதயத்தில்
பெரும் பள்ளம்
உன் கண் அரிப்பாலே

காற்றுள்ள போதே
தூற்றிக் கொள்
இந்த காதலன்
சுமார் எனில்
மனதை
தேற்றிக் கொள்
எனை ஏற்றுக் கொள்...

-இப்படிக்கு
காதலியை பிச்சை பெற்றவன்

Wednesday, August 10, 2011

பதில் தெரியாமல் காதலிக்கிறேன்...

தவமிருக்காத
வரம்
கிடைத்தது
நான் இருக்கும்
இடத்திற்க்கு
நீ வரும்
போது

நேற்றுதான்
தெரிந்தது
நான் 
உனை பார்த்து
வெளியிட்ட
பெருமூச்சுதான்
ஆடிக்காற்றாம்

காய வேண்டாம்
காயமும்
வேண்டாம்
பத்திரம்
உன் இதயக்
கொடியில்
நான் போட்ட
இதயம்

விவசாயிக்கு
தெரியாமல்
நான் விதைத்த
விதைகள்
அறுவடைக்கு
ஏற்ற நாள்
பிப்ரவரி 14

நீ
என் பார்வைக்கு
வராத நாட்களை
காலண்டரில்
நாட்களாக
நான் கணக்கு
வைப்பதில்லை

மாறாத
மனம்
உனக்கு
அதை
மாற்ற துடிக்கும்
ஆறாத மனம்
எனக்கு

என்னை
பொருத்தவரை
இந்த
தூண்டிலுக்காக
ஏங்கும்
வித்யாசமான
மீன்தான்
அது நான்தான்

இந்த
காதலில்
மட்டும்
எப்போதும்
சுகப்பிரசவம்தான்
பெற்ற பிள்ளையை
ஆற்றிலா
விடுவோம்

இப்படிக்கு
- ஒரு கை ஓசையன்

வருகைக்கு நன்றி!

...