Sunday, April 4, 2010

காதல் பசி


நிறைய
தடவை
கொள்ளை
போயிருக்கிறேன் - உன்
கொஞ்சும்
விழிகளால்

உன்னை பாராமல்
நிலையாக
நிற்கத்
திரணியில்லாமல்
தடுமாறுகின்றன
எனது கால்கள்

வழியில்
உன்னை
காணாது
அழுது
புரண்டு
கெஞ்சுகின்றன
எனது விழிகள்

உன்னை
எப்போதும்
பருகத்
தயாராய்
இருக்கின்றன
எனது பரிதாப
பார்வைகள்

உன் கைவிரல்
கோர்க்காது
காய்ந்து
கிடக்கின்றன
எனது கைகள்

நீ சாயாது
வெற்றுத்
தரிசாக
வெம்பிக் கிடக்கிறது
என் நெஞ்சம்

உன் குரல்
கேட்காமல்
சிதலமடைந்து
போயிருக்கிறது
என் செவிகள்

உன்
பெயர்
சொல்லாது
இறுகிப்
போயிருக்கிறது
என் இதழ்கள்

மொத்தத்தில்
உன் நிழல்
விழவில்லை
நிஜமாகவே
இடிந்து
போயிருக்கிறது
என் இதயம்

-இப்படிக்கு
காத்திருப்பவன்

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

வருகைக்கு நன்றி!

...