Tuesday, October 12, 2010

ஆதாம் ஏவாள்


மறந்து
போனார்கள்
மற்றதையெல்லாம்
கேட்டால்
இவர்கள்
காதலர்களாம்

எதை
பற்றியும்
கவலைபடாத
பற்றியதை
மற்றுமே
நினைக்கத்
தெரிந்த
நீரோக்கள்

எத்தனை
செய்வார்கள்
எதனையும்
செய்வார்கள்
ஆனால்
கண்களில்
மட்டும்
கள்ளத்தனம்

முக்காடு
போட்டு
முழு வேகம்
சென்று
பால்கனியில்
அமர்ந்து
படம் பார்க்கும்
பச்சை
காதலர்கள்

வராத
வீரம்
வந்தது
பல தரம்
காரணம்
ஜோடியின்
பார்வை
பூரணம்

கண்டுபிடிப்பதில்
தன்னை
மறப்பதும்
கண்டுபிடித்ததில்
தன்னை
கரைப்பதும்
இவர்களுக்கு
கை வந்த கலை

கை பற்றிச்
செல்கிற போது
இவர்கள்
லேசாவார்கள்
மற்றவர்களுக்கு
கனக்கும்
துடிக்கும்
வார்த்தைகள்
தடிக்கும்

பிறவிப்
பயனை
அடைந்த
ஜோடிகளாம்
முற்றிலும்
காதல்
மழையில்
நனைந்த
கோழிகளாம்

எந்த பிறவி
என்ன சொன்னாலும்
வாசலில்
அதை கழுவி
ஊற்றுவார்கள்
முறைத்தால்
பார்வையால்
கழுவில்
ஏற்றுவார்கள்

காதல்
வகுக்கப்படவில்லை
சொல்லித்தர
முடியாது
வருவது
தெரியாது
வருமுன்
காக்க முடியாது

மொத்தத்தில்
காதலர்கள்
ரசிக்க
ருசிக்க
தனித்து
விடப்பட்டதுதான்
இந்த
பூமித் தீவு

-இப்படிக்கு
நான் யாருனு தெரியாதாக்கும்...

1 comment:

Anonymous said...

HI BROTHER, I AM REALLY HAPPY TO JOIN WITH YOU ANOTHER ONE...
I THINK YOU ARE ALWAYS IN LOVE...
I WISH YOU WROTE TO MORE...


GANDHI SUBIRAMANI....

வருகைக்கு நன்றி!

...