Thursday, July 30, 2015

தமிழ்த்தாய்க்கு தலைமகனார்


தமிழ்த் தாய்க்கு
தலைமகனார்
தன்னிகரில்லா
மக்கள் தலைவரானார்

தமிழில் அரிச்சுவடி
வளர்சியில்
அறிவியல்படி
இவரால் உயரப்
பறந்தது இந்தியக் கொடி

வேலைக்காக
வெளிநாடு
செல்லும் போதையில்
விஞ்ஞானத்தை
காட்டி அஞ்ஞானம்
அகற்றிய அற்புதர்

கனவென்றாலே
இயலாமை
அதை களம்
கட்டி இழுத்ததால்
இந்திய இளைஞர்களை
கண்டு வெளிநாடுகள்
பொறாமை

சாதித்த பிறகும்
கூட போதிப்பில
போக ஒரு மனம்
வேண்டும்
பிள்ளைகளுக்கு
ஆசானாய்...
தகப்பனாய்...
தோழனாய்...

கடைக் கோடியில்
உதயமாகி
கண்ணியராய்
வாழ்ந்து
நாட்டுக்கு
உழைத்து
உத்தமரானார்
மக்கள் மனதில்
உரமானார்...

-அய்யா வாழும் போது வாழ்ந்த பெருமை பெற்றவன்

No comments:

வருகைக்கு நன்றி!

...