Saturday, November 7, 2009

காதலின் மரணப்பிடியில்


நிறைய
தேங்குகின்றன
உன் நினைவுகள்
என்
நினைவலைகளில்

நிறைய
ஒப்பந்தம்
செய்து கொண்டாய்
என்னை
பாராமலிருக்க
உன் மனத்துடன்

அம்புகளை
எய்துவிட்டு
அமைதியாகிவிடுகிறது
உன் விழிகள்
ஆனந்தமடைகிறது
என் மனது

தூக்கத்தில்
நடப்பவனை
கேள்விப்பட்டிருப்பாய்
அனால்- நான்
உன் நடையால்
தூக்கம் கெட்டு
அலைகிறேன்

கடல் அலை
பார்த்து
பயந்ததில்லை
நான் - ஆனால்
உன் கடைக்கண்ணின்
அலை அடித்து
அதிர்ந்து
போயிருக்கிறேன்

காற்று பட்டு
சிவந்து
போன உன்
கன்னங்களை
பார்த்து
நான் நிறையவே
காயம்பட்டிருக்கிறேன்

உன்
ஒற்றைச்
சுருள் முடியில்
என்னை எப்போதோ
முடிந்து விட்டாய்
தன்னை
அறியாமல்

என்
திருட்டுப்பார்வை
வேகத்தை
ஜீரணிக்க முடியாமல்
என்
காதல் மரத்தின்
சில
கிளைகளை
வெட்டிச் சென்றாய்

நம்
காதல்
மரத்தின்
வேரில் - நீ
நீரூற்றும்
நாள்
வெகு தொலைவில்
இல்லை

இப்படிக்கு

- பசுமையான வேர்

No comments:

வருகைக்கு நன்றி!

...