Wednesday, February 10, 2010
தேவைதான் இது எனக்கு!
நீ
சிந்துகின்ற
பார்வையை
எண்ணி
சிலிர்த்துப் போனது
என் மனது
நீ துடைத்துவிட்ட
வேர்வை
துளிகள்
இப்போது
எனக்குள்
முளைத்துவிட்டன
உன் கண்கள்
எனும் தீக்குச்சி
எப்போது
என் பார்வை
பட்டு
பதத்துப் போகும்
நீ உன்
கை பதித்த
இடங்களின்
கை ரேகைகளை
நகலெடுக்கும்
நான் ஒரு
குற்றவாளி
உன் வரவுக்காக
கடைகளும்
என்
கடைக் கண்ணும்
காத்திருக்கின்றன
என் வார்த்தைகளை
தடுக்கின்றன
உன்னால்
ஊனமாக்கி
ஒதுக்கப்பட்ட
உன்
காதோர
முடிக் கற்றைகள்
கோபமோ
முறைப்போ
வசவோ
கசந்த
வார்த்தைகளோ
இதில்
ஏதாவது ஒரு
ஆயுதத்தை
எய்து விடு
திரும்பிப் பார்ப்பது
தீய பழக்கமல்ல
இதை
தினமும்
சொல்கிறேன்
உன் பின்னால்
வந்து
நாள் முழுவதும்
உன் மீது
போர்
தொடுத்து
என்னை
சிறை கொடுக்கிறேன்
வழக்கமில்லை
வருந்துவதற்க்கு
இந்த வலிகள்
வேண்டும்
உன்னோடு
வாழ்வதற்க்க
- இப்படிக்கு
நிராயுதபாணி ஆனவன்
Subscribe to:
Post Comments (Atom)
வருகைக்கு நன்றி!
...
No comments:
Post a Comment