Tuesday, February 16, 2010

காதலித்(தேன்)


உன் விழி
படிக்கட்டில்
பயணிக்கிறேன்
உன் பார்வை
அறிந்தும்
அறியாமலும்

உன் கிட்டப்
பார்வையால்
கெட்டுப்
போயிருக்கிறது
என்
இதயம்

தினமும்
உன்னை
கண்டவுடன்
என் விழிகள்
மேயந்து வர
கிளம்புகிறது

வீழ்வதும்
எழுவதும்
தொடர்கின்றன
நாமிருவரும்
விழிகளால்
மோதும் போது

எதிரெதிர்
துருவங்கள்
ஒன்றையொன்று
ஈர்க்கும் தத்துவம்
உண்மையாகிப்
போனது
நம் புருவங்களால்

உன் இதழ்கள்
பிரிந்து
சேர்ந்து
வார்த்தைகளாகி
வந்து
என் இதயத்தை
காய வைக்கிறது

உன்
கூர்மையான
கூந்தலை
பார்க்கும் போது
சில சமயம்
குருடாகி விடுகிறது

தினமும்
ஊனமாகிப்
போகிறேன்
உன்
நடை அழகை
பார்த்து

சில சமயம்
விரதமிருக்கின்றன
எனது விழிகள்
ஜன்னலோரம்
உன்
விரல்கள் காணாது

தேனென்றால்
வண்டு
பூவை
சுற்ற வேண்டும்
நீ வேண்டுமென்றாலும்
நானும்...

இப்படிக்கு
-உன் கடைகண்ணால் ஆசிர்வாதிக்கப்பட்டவன்

No comments:

வருகைக்கு நன்றி!

...