Wednesday, August 10, 2011

பதில் தெரியாமல் காதலிக்கிறேன்...

தவமிருக்காத
வரம்
கிடைத்தது
நான் இருக்கும்
இடத்திற்க்கு
நீ வரும்
போது

நேற்றுதான்
தெரிந்தது
நான் 
உனை பார்த்து
வெளியிட்ட
பெருமூச்சுதான்
ஆடிக்காற்றாம்

காய வேண்டாம்
காயமும்
வேண்டாம்
பத்திரம்
உன் இதயக்
கொடியில்
நான் போட்ட
இதயம்

விவசாயிக்கு
தெரியாமல்
நான் விதைத்த
விதைகள்
அறுவடைக்கு
ஏற்ற நாள்
பிப்ரவரி 14

நீ
என் பார்வைக்கு
வராத நாட்களை
காலண்டரில்
நாட்களாக
நான் கணக்கு
வைப்பதில்லை

மாறாத
மனம்
உனக்கு
அதை
மாற்ற துடிக்கும்
ஆறாத மனம்
எனக்கு

என்னை
பொருத்தவரை
இந்த
தூண்டிலுக்காக
ஏங்கும்
வித்யாசமான
மீன்தான்
அது நான்தான்

இந்த
காதலில்
மட்டும்
எப்போதும்
சுகப்பிரசவம்தான்
பெற்ற பிள்ளையை
ஆற்றிலா
விடுவோம்

இப்படிக்கு
- ஒரு கை ஓசையன்

No comments:

வருகைக்கு நன்றி!

...