Thursday, September 2, 2010

நீயும் நானும்


மேகத்தின்
வேர்வைகளை
மரத்தின்
வேர்கள்
உறுஞ்சும்
உன் விழிகளின்
வேகங்களை
என் பார்வை
உறுஞ்சும்

தப்பிக்கப்
பார்த்தாயோ
இல்லை
தப்பிப்
பார்த்தாயோ
சிக்கிக்
கொண்டது
நானல்லவா

உனக்கே
தெரியாமல்
எனக்குள்
வந்து
சில பூக்களை
நட்டு வைத்துப்
போகிறாய்

நடுக்கிய
வகுடும்
இடுக்கிய
பையும்
வெடுக்கிய
நடையும்
சிதறிய
என்
இலக்கணம்

கை எடுத்து
நாடி தட்டி
சாமி முன்
உக்கி
போட்டு
நீ செய்யும்
விரைவு
தரிசனம்
தப்பாமல்
நானும்
உன்னை நோக்கி

யாருக்குத்
தெரிகிறது
இந்த தத்துவம்
உன் பற்று
இருந்ததால்தான்
உன்னை
பின்பற்றி
வருகிறேன்

உனக்கே
தெரியாத
உன் வீட்டின்
மொத்த மாடி
படிக்கட்டுகள்
எழுதாத
நீ வீசி
எறிந்த பேனா
அடிக்கடி
நீ ஒதுக்கி
விடும் முடிக்கற்றை
எனக்குத்
தெரியும்

என்னை
எப்போதாவது
கண்டிப்பாக
உனக்குத்
தெரியும்
என்ற
நம்மிக்கையில்...

-இப்படிக்கு
உனக்கு மட்டும் தபால்காரன்

No comments:

வருகைக்கு நன்றி!

...