Sunday, September 19, 2010

இதுமட்டும் தானா?


நிறைய
சேதாரம்
இருக்காத
பின்னே
நீ திரும்பி
பார்த்த
பிறகும்

உன்
பார்வையின்
தொடர்பும்
துண்டிப்பும்
கிரகிக்கும்
என் கண்
செல்கள்

அடிக்கடி
நீ யோசிக்கும்
போது
உன் ஆட்காட்டி
விரலை
பார்த்து
நிறைய
பொறாமை

பகலிலே
தெரியும்
முழு நிலவு
விழித்தாலே
வருவது
உன்
கனவு

தூறலில்
நான்
வளைத்த
வானவில்
உன்னை
எப்போது
அடைகாத்திருப்பது
என் மனதில்

சுகமான
வேதனைகள்
குத்தும்
உன் புருவ
வில்லில்
பிறக்கும்
தரமான
பார்வை
அம்புகள்

உலகில்
எத்தனையோ
உருவங்கள்
இருந்தும்
நமக்குள்
மட்டும்
தோரணங்கள்
தெரியுமா
காரணங்கள்!!!?

-இப்படிக்கு
திரும்பிப்பார்த்ததில் தீய்க்கு இரையானவன்

No comments:

வருகைக்கு நன்றி!

...