Sunday, September 19, 2010

ஜென்ம ஜென்மமாய்


உன்னை
நினைத்து
வரையும்
வரிகள்
பேனாவிற்கு
பிரசவ
நேரங்கள்

இந்த
காதல்
மட்டும்தான்
நினைத்த
நேரத்தில்
விண்ணை
முட்ட
பற்றி நிற்க்கிறது

பற்றி
எரிகின்ற
இந்த
திராவகத்
தீயில்
முற்றும்
உணர்ந்த
ஞானி

உன்னை
கண்ட
நிமிடத்தில்
உடனே
பூக்கிறது
தண்ணீர்
பூக்கள்
என் நெற்றியில்

பார்வை
திருட்டை
பார்த்ததற்க்கு
நீயே கொடுத்த
வெக்கத் தண்டனை
ஒன்றும்
அறியாத
கடிபட்ட - உன்
இதழ்கள்

எல்லாரும்
தொலைந்து
போனதை
தேடுவார்கள்
நான் மட்டும்
கிடைத்ததில்
தேடிக்
கொண்டிருக்கிறேன்

ஜென்ம
வேண்டுதலுக்கு
கிடைத்த
வரமான
அழகிய
சாபம் நீ

இந்த
காதலுக்காகவே
பிறவிகள்
வேண்டும்
வலிகள்
வேண்டும்
வாழ்க்கை
வேண்டும்

-இப்படிக்கு
காதல் பிறப்பால் உயர்ந்தவன்

No comments:

வருகைக்கு நன்றி!

...